கொடுமை கொடுமை-ன்னு கோயிலுக்கு போனா !!!
தனியார் வானொலிகளின் பண்பலை நிகழ்ச்சிகளை (பண்பு எதுவும் இல்லை என்பதனால் தானோ என்னவோ, அவர்கள் அதை FM என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்) பொறுக்க மாட்டாமல் சென்னை வானொலியின் (கவனிக்கவும்: அது 'ஆல் இந்தியா ரேடியோ'வே தான்) 102.3-ல் பாடல்களை ரஸித்துக் கொண்டிருந்த வேளையில்........ எதிர்பாராத ஒரு அதிர்ச்சி, சட்டெனத் தோன்றிய அருவறுப்பு. வேறு ஒன்றுமில்லை, ஆணுறைக்கான அபத்தமான, ஆபத்தான ஒரு விளம்பரம்.
தனியார் வானொலிகளின் பண்பலை நிகழ்ச்சிகளை (பண்பு எதுவும் இல்லை என்பதனால் தானோ என்னவோ, அவர்கள் அதை FM என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்) பொறுக்க மாட்டாமல் சென்னை வானொலியின் (கவனிக்கவும்: அது 'ஆல் இந்தியா ரேடியோ'வே தான்) 102.3-ல் பாடல்களை ரஸித்துக் கொண்டிருந்த வேளையில்........ எதிர்பாராத ஒரு அதிர்ச்சி, சட்டெனத் தோன்றிய அருவறுப்பு. வேறு ஒன்றுமில்லை, ஆணுறைக்கான அபத்தமான, ஆபத்தான ஒரு விளம்பரம்.
விழிப்புணர்வு எனும் பெயரில் ஒரு விவரங்கெட்டத்தனம் !!
நடிகர் விவேக்-ஐ நினைவு படுத்திடும் குரல் கொண்ட ஒரு சங்கோஜப் பேர்வழிக்கும், கிளிச்சாமி(?) எனும் கற்பனை பாத்திரத்திற்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்.
வாழ்க்கையில் வேதனை, வாடகைக்கு வீடு கொடுக்க மாமி மறுக்கிறாள் என மறுதலிக்கும் சங்கோஜப் பேர்வழி, கிளியிடம் உபாயம் கேட்கிறார். அதற்கு அந்த புத்திசாலி கிளி அவர் ஆணுறை பயன்படுத்துபவர் என்று பிறர்க்கு(குறிப்பாக அந்த வீட்டு மாமிக்கு) உணர்த்தும் படி சொல்கிறது. அதன் மூலம் அந்த பெண்மணி மயங்குவதுடன், மசியவும் செய்வாள் என்பதை கிளி அடிக்கோடிட்டு காட்டுகிறது.
சாதனையா, சோதனையா ??
இதை முயன்று பார்க்க முனைவோர், ஆணுறை இசைக்குறியை தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் (Download Condom RingTone for Mobiles) செய்தபின் இவ்விளம்பரத்தின் தயாரிப்பாளர், பொறுப்பாளர் வீட்டு பெண்களிடத்து சோதித்து பார்ப்பார்களேயானால் அதற்கு நாம் பொறுப்பல்ல (ஏன், அவர்களே கூட பொறுப்பல்ல) !!
மௌனம் காக்கும் பெண்ணியம்
மணம் ஆகாத ஆணும் பெண்ணும் சல்லாபம் செய்வதை தடுக்க இயலாத (அல்லது விரும்பாத) அரசு, அதை ஊக்குவிக்கும் விதமாக செயல் படுவது வெட்கக்கேடு.
"அதையும் விட அவலம் எதுவென்றால், பெண்ணுரிமை பேசும் மாதர் குல மாணிக்கங்கள் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் !!"
'ஆகாசவாணி'யின் தமிழாக்கம் ('ஆல் இந்தியா ரேடியோ' ஆக இல்லாது) "அகில இந்திய வானொலி"யாக இருந்திருப்பின் இத்தகைய இழிவு ஒருவேளை நிகழ்ந்திருக்காதோ என்னவோ !! 'மொழிச் சிதைவு மட்டுமின்றி, கலாச்சார சிதைவும் தவிர்க்கப் பட்டிருக்கும்' என்பது எனது நம்பிக்கை.
இதை எழுத முனையுமுன் இணைய தளங்களில் இது குறித்து வேறு எவரேனும் எழுதி இருக்கிறார்களாவென தேடினேன்; கிடைக்கவில்லை. உங்கள் கருத்துக்களை உரக்கக் சொல்லுங்கள் !!
ஆதங்கத்துடன்
இளைய தமிழன்
^^ கரிகாலன் ^^
2 comments:
சந்தேகமேன்றி தவறுதான்.
:( - It is not a good one from AIR (All India Radio)
Post a Comment